சே குவேரா பிறந்தநாள்: கியூபா மக்களிடமிருந்து பாடம் கற்போம்!

“எங்கெல்லாம் அடிமைத்தனம் இருக்கிறதோ

அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்”

என்று சொன்னவன் சே குவேரா.

அவ்விதமே வாழ்ந்தவன் சே குவேரா.

எல்லைகளைக் கடந்தவன்.

அதனால் காலத்தை வென்றவன்.

அந்த புரட்சிக்காரனின் பிறந்தநாள் இன்று.

அவனது நினைவை, வாழ்க்கையைப் போற்றுவோம்.

கியூபாவின் விடுதலைக்காகப் போராடிய

அந்த அந்நிய அர்ஜெண்டினாக்காரனை

“வந்தேறி” என்று வசை பாடாமல்

அவனை அமைச்சனாக்கி அழகு பார்த்த

கியூபா மக்களிடமிருந்து பாடம் கற்போம்.

– ஆசிரியர்,

ஹீரோ நியூஸ் ஆன்லைன் டாட்காம்