தொழிலதிபர் ‘ஜெம் கிரானைட்ஸ்’ வீரமணி பாலியல் வழக்கு: நடந்தது என்ன?

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஜெம் வீரமணி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த செய்தி பரவலாக பேசப்படவே இல்லை. இன்றைய ஊடகங்கள் எந்தளவு மலினமாக செயல்படுகின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

இந்த வழக்கில் வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட கதையையே ஒரு சினிமாவாக எடுக்கலாம். பணம் இருந்தால் எந்த குற்றத்தில் இருந்தும் தப்பி விடலாம் என்று நினைப்பவர்களுக்கு வீரமணியின் கைது ஒரு பாடம். காலம் காத்திருந்து சொல்லிய பதில்.

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர் என்று சொல்லப்படுகிறது. அவரிடம் இருக்கும் பணத்திற்கு உலக அழகிகளையே படுக்கையில் வீழ்த்தலாம். ஆனாலும் மனிதருக்கு இருந்த வக்கிரபுத்தி காரணமாக சிறுமிகளை குறி வைத்திருக்கிறார். ஏழைச் சிறுமிகளின் படிப்பிற்கு உதவுவதற்காக ஒரு ட்ரஸ்ட் நடத்தப்படுகிறது. அதில் உதவி கேட்டு வரும் சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இது நீண்டகாலமாக நடைபெறுகிறது என்று சொல்லப்பட்டாலும், நிறைய சிறுமிகள் பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லை.

ஆனால் வீரமணி ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. அதை காட்டி பணம் பெற வேண்டும் என்பதே திட்டம்.

அந்த வீடியோவை எடுத்தவர் என்று சொல்லப்படுபவர் வீரமணிக்கு நெருக்கமான சாந்தி என்பவர். அவரும் அவரது கணவரும் சிங்கப்பூரில் படித்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட நபர்கள் தான் சிறுமிகளை மூளைச்சலவை செய்து வீரமணிக்கு சப்ளை செய்திருக்கிறார்கள். இவர்கள் வீரமணியின் மற்றொரு நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

வீரமணிக்கு இவ்வளவு நெருக்கமாக இருந்த பொழுதும் அவரிடம் இருந்த அதீத பணம் சாந்தி கண்ணை உறுத்தியிருக்கிறது. சும்மா கேட்டால் கிடைக்காதே. எனவே வீரமணி ஒரு சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை படம் எடுத்திருக்கிறார் சாந்தி.

நேரடியாக அந்த வீடியோவை காட்டி மிரட்ட முடியாது என்பதால் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் என்பவரின் மூலம் முதல் மிரட்டல் விடப்படுகிறது. ரஞ்சன் வீடியோ ஆதாரத்துடன் வீரமணியை சந்தித்து சில கோடிகளை பெறுகிறார். அதை பிரித்துக் கொள்கிறார்கள்.

ஆனாலும் பணம் போதவில்லை. மேலும் இன்னொரு அரசியல்வாதியை சந்தித்து அவர் மூலம் பேரம் பேசப்படுகிறது. ஆனால் அந்த டீலிங் முடியவில்லை.

இந்த நிலையில் தான் இந்த வீடியோ பற்றி தினகரன் பத்திரிகையாளர் சுரேஷ் வேதநாயகம் என்பவருக்கு தெரிய வருகிறது. அவரும் சென்னை மாநகர முன்னாள் கமிஷனர் அருணும் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்களோடு இன்னொரு நபரும் இணைகிறார்.

வீரமணி போன்ற பெரும் பணக்காரர்களிடம் 1-2 கோடி பேரம் பேசுவதா என்று நினைத்த இந்த கும்பல், ஒரு திட்டம் தீட்டுகிறது. வெறும் வீடியோவை காட்டினால் குறைந்த தொகை தான் கிடைக்கும். எனவே ஒரு வழக்கு பதிவு செய்து அதைக் காட்டி பெரும் தொகையை கறக்கலாம் என்று முடிவெடுத்து அதற்காக திட்டம் தீட்டப்படுகிறது.

அந்த வீடியோவில் இருக்கும் சம்பவம் 2019-2023ல் நடைபெற்றது என்று சொல்லப்படுகிறது. வீரமணி மீது வழக்கு பதிவு செய்ய முயற்சி நடப்பது 2025-ல்.

இந்த வீடியோ அடங்கிய ஒரு பென்ட்ரைவ் ஒரு குறிப்பிட்ட என் ஜி ஒ வசம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் மூலம் ஒரு அனானிமஸ் புகார் அளிக்கப்படுகிறது. அதாவது வீடியோவை யார் கொடுத்தார்கள் என்று தெரியாது. ஆனால் வீடியோவில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதால் புகார் அளிக்கிறோம் என்று சொல்லப்படுகிறது.

நடந்திருப்பது போக்ஸோ குற்றம். ஆனால் இந்த வழக்கு பதியப்படுவது விபச்சார தடுப்பு பிரிவில். ஏனெனில் அங்கே தான் வேண்டிய அதிகாரிகள் இருக்கிறார்கள்.

வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு பெரும் பேரம் நடக்கிறது. கிட்டத்தட்ட 50 கோடி கைமாறுகிறது. இந்த வழக்கு பற்றி எந்த பத்திரிகையும் செய்தி வெளியிடவில்லை. எல்லோரும் கப்சிப்பாக இருந்திருக்கிறார்கள். எந்த ஒரு அரசியல்கட்சியும் இதை பேசவில்லை.

பணம் கைமாறிய பிறகு வழக்கு கிடப்பில் போடப்படுகிறது. ஆனால் எப் ஐ ஆரை ரத்து செய்தாக வேண்டுமே. எனவே காவல்துறை தரப்பில் வழக்கை முடிப்பதற்கு நீதிமன்றத்தில் முறையிடப்படுகிறது.

அதன் பிறகு நடந்தது தான் டிவிஸ்ட்.

இந்த குறிப்பிட்ட வீடியோவில் இருப்பது யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று முறையிடுகிறார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வளவு தொழில்நுட்பங்கள் இருக்கும் போது, அதை பயன்படுத்தி அந்த வீடியோவில் இருப்பவர் யாரென்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுங்கள். வீடியோவை தடயவியல் சோதனைக்கு அனுப்புங்கள் என்று உத்தரவிட்டார் நீதிபதி.

ஆனாலும் திமுக ஆட்சியில் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

ஆட்சி மாறி தற்போதைய ஆணையர் அமல்ராஜிடம் ஒரு மனசாட்சி உள்ள பத்திரிகையாளர் இந்த சம்பவங்களை முறையிட, உடனடியாக கேஸை ஓபன் செய்கிறார். தற்போது வீரமணி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஒரு சிறுமிக்கு நடந்த பாலியல் குற்றத்தை வைத்து ஒரு பெரிய டீமே பணம் சம்பாதித்திருக்கிறது. அதில் காவல்துறை அதிகாரிகளே சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

வீரமணி போல இன்னும் பல பெரிய மனிதர்கள் இதற்கு பின்னால் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. வீரமணி மற்றும் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டாலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள், காவல்துறை அதிகாரிகள் இன்னும் சுதந்திரமாக வெளியில் இருக்கிறார்கள். அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் தான் பதில் சொல்ல வேண்டும்.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால் அந்த வீடியோவில் இருந்த பெண் சில ஆண்டுகளுக்கு முன்பே மரணித்துவிட்டாள் என்று கூறப்படுகிறது.

பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் கொடூர மிருகங்கள் நடமாடும் உலகமிது.

இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. அப்போது தான் வெளிப்படையான விசாரணை நடக்கும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஒருவர் கூட பாக்கியில்லாமல் தண்டிக்கப்படவேண்டும்.

விஜய் மாமாவுக்கு ஓட்டு போடச்சொல்லுங்க என்று குழந்தைகளிடம் ஓட்டு கேட்டீர்களே சிஎம் சார், அப்படி ஒரு குழந்தை தான் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.

நடவடிக்கை எடுப்பீர்களா?

(முகநூலில் படித்தது)