“தலித் என்பதற்காக ஒரு ஆர்.எஸ்.எஸ். நபரை ஆதரிக்க முடியாது!”

நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக தாக்குதல்களையும், கொலைவெறி ஆட்டத்தையும் நடத்திவரும் சங்பரிவார கூட்டத்தின் செயல்களை தடுக்காது மறைமுகமாக ஊக்குவித்து வரும் பா.ஜ.க. ஒரு தலித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கிறது.

கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்னால் அதை நம்பி எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டுமாம்…!

தவிர, கே.ஆர்.நாராயணனை போல நடுநிலையோடு இவர் செயல்படுவார் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்டவர்.

இதில், மறைமுக அஜன்டாவை பின்னிறுத்தி, வேட்பாளரை பா.ஜ.க அறிவுத்துள்ளது என்பது தெளிவு.

“தலித் என்பதாலேயே இவரை ஆதரித்துவிட முடியாது” என்று திருமாவளவன் சொல்வதில் உண்மை இருக்கிறது.

HAROON MASS