நயன்தாரா பற்றிய சர்ச்சை பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம்!

‘கொலையுதிர் காலம்’ படவிழாவில் நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த சர்ச்சை தொடர்பாக நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரையும் குறிப்பிட்டு ”ராதாரவி மீது நடவடிக்கை எடுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.  இதனை தொடர்ந்து திமுக நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து அவர் தற்காலிகமாக தி.மு.க. விலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்” என கூறப்பட்டுள்ளது.