பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பாம்பு சட்டை’: படப்பிடிப்பு முடிந்தது! 

பணத்தின் மீது மக்கள் எந்த அளவிற்கு ஆசை வைத்திருக்கிறார்கள் என்பதை சித்தரித்த வெற்றிப்படம் ‘சதுரங்க வேட்டை’. இப்படத்தை தயாரித்த மனோபாலா, அடுத்து தயாரித்துவரும் படம் ‘பாம்பு சட்டை’

பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, மிகுந்த உற்சாகத்தோடு  நிறைவு பெற்றது. தற்போது தொழில்நுட்ப ரீதியாக படத்தை மேலும்  மெருகேற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

‘பாம்பு சட்டை’ படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருக்கும்  ‘சினிமா சிட்டி’ கே.கங்காதரனோடு இணைந்து,  அபி & அபி நிறுவனத்தின் நிறுவனர் அபினேஷ் இளங்கோவன் இந்த படத்தை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.