பா.இரஞ்சித் தயாரிப்பில்  கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட புதிய  படம்: படப்பிடிப்பு துவங்கியது

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட  இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

O2 ,  தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன்  இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

அரக்கோணம்  சுற்றுவட்டார பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.

தமிழகத்தின் நகரங்கள் , ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும் , நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும்படியான கதையமைப்பில் உருவாக்கி இன்று படப்பிடிப்பை துங்குகிறார்கள்.

திரைக்கதை வசனம், – தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார்..

இயக்கம் – ஜெய்குமார்.

தயாரிப்பு- லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி, நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித்.

கலை – ரகு

எடிட்டிங் – செல்வா RK

உடைகள்- ஏகாம்பரம் .

ஸ்டில்ஸ் – ராஜா

பி ஆர் ஓ – குணா

Read previous post:
0a1b
வாய்க்கொழுப்பால் வன்முறையை தூண்ட முயன்ற ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது

திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், வாய்க்கொழுப்பால் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பெரியார் குறித்து

Close