கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் – விமர்சனம்

தன்னுடன் கல்லூரியில் படிக்கும் இப் ராஹிம் (அசோக்) மீது காதல்கொள் ளும் ஜெயா (பிரியங்கா ரூத்). இஸ் லாத்துக்கு மாறி, ராசியா என்று தனதுப் பெயரை மாற்றி, குடும்பத்தைப் பிரிந்து காதலனைக் கரம் பற்றுகிறாள். மனைவி யின் மீது மிகுந்த அன்புடன் இருக்கும் இப்ராஹிம், ஹெராயின் விற்பனையில் ஈடுபடும் கும்பலின் தலைவர் ராவுத்தரிடம் (வேலு பிரபாகரன்) பணியாற்றுகிறான். அவனை சூழ்ச்சியில் சிக்க வைத்து போலீஸ் என்கவுன்ட்டரில் கொலை செய்கின்றனர்.

தன் கணவன் சாவுக்கு காரணமான ராவுத்தரையும் அவனது இரண்டு மகன் களையும் கொல்ல முடிவெடுக்கிறாள் ராசியா. ராவுத்தரின் முன்னாள் கூட்டாளி யான பாக்ஸி (டேனியல் பாலாஜி), ராவுத்தரால் துரத்தியடிக்கப்பட்டு மும்பையில் தலைமறைவாக வாழ் கிறான். ராவுத்தரை வீழ்த்தி போதை மருந்து மாஃபியாவைக் கைப்பற்றும் தருணத்துக்காகக் காத்திருக்கிறான் பாக்ஸி. ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்கிற முறையில் பாக்ஸியைத் தேடி மும்பைக்குச் செல்லும் ராசியாவுக்கு, சண்டை போடவும் துப்பாக்கி சுடவும் பயிற்சியளிக்கிறான் பாக்ஸி. இறுதியில் ராசியா வென்றாளா? வீழ்ந்தாளா என் பதை ரத்தம் சொட்டச் சொட்ட சொல் கிறது ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’.

இதுவரை வந்த பெரும்பாலான தமிழ்ப் படங்களில் யாரையாவது பழி வாங்கத் துடிக்கும் பெண்கள், திட்டம் தீட்டுபவர்களாகவும் பின்னால் இருந்து இயக்குபவர்களாகவுமே இருந்திருக் கிறார்கள். அவற்றுக்கு மாறாக ஒரு பெண்ணே களத்தில் இறங்கி தன் உயி ரைப் பணயம் வைத்துப் பழிவாங்குவ தாகக் காட்டியிருக்கிறது ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’. அதுவே இந்தப் படத்தை ஒரு வழக்கமான பழிவாங்கல் கதையா கவோ, கேங்ஸ்டர் படமாகவோ கடந்து போகவிடாமல் தடுக்கிறது. இப்படி ஒரு கதையை வைத்துக்கொண்டு சிறப்பான ஒளிப்பதிவும், தரமான இசையும், சில ஊகிக்க முடியாத திருப்பங்களும் கைகொடுக்க ஒரு தரமான கேங்க்ஸ்டர் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் சி.வி.குமார்.

தொடக்கக் காட்சிகளில் சிறுவயதில் இருந்தே ‘திருப்பி அடிக்கும்’ முனைப்பு இருப்பவராக ராசியாவைக் காட்டியிருப் பது அந்தக் கதாபாத்திரத்தின் தன் மையை வெகுஇயல்பாக உள்வாங்க வைத்துவிடுகிறது. இதனால், கணவ னைக் கொன்றவர்களை இந்த அளவுக்கு கொடூரமாகப் பழிவாங்க வேண்டுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்கப்படு கிறது. புது மணத் தம்பதியர் நெருக்க மாக இருக்கும் காட்சிகளுக்கு போதிய இடமளித்திருப்பது அந்தப் பெண்ணின் இழப்பின் வலியை ரசிகர்கள் உள் வாங்க உதவுகிறது.

பழிவாங்க முடிவெடுத்தவுடன் களத் தில் இறங்காமல் முறையாகப் பயிற்சி எடுத்து, பின்பு தன் இலக்குகளை நோக்கி செல்வதுபோல் காட்டி தேவை யற்ற சூப்பர் ஹீரோத்தனங்களைத் தவிர்த்திருப்பதும் பாராட்டுக்குரியது. ஆனால் படத்தில் மாஸ் காட்சிகள் இல்லா மல் இல்லை. பாக்ஸியின் குழுவில் தன் னிடம் தவறாக நடந்துகொள்பவரை ராசியா புரட்டிப் போடுவதும் இடை வேளைக் காட்சியில் இரண்டு பேரைக் கொன்றுவிட்டு அலட்டிக்கொள்ளாமல் சென்று, தட்டில் மிச்சமிருக்கும் பிரியாணி யைச் சாப்பிடுவதும் அசலான மாஸ் காட்சிகளாக ரசிகர்களின் பலத்த கரகோஷத்தைப் பெறுகின்றன.

இவ்வளவு யோசித்த இயக்குநர் பழிவாங்கு படலத்தில் நம்பகத்தன்மைக் குக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஒருகட்டத்துக்குப் பின்பு நாயகி நினைப்பதெல்லாம் எளிதாக நடந்துவிடு கிறது. எல்லாமே அவருக்கு சாதகமாகி விடுகின்றன. எதிர்த்தரப்பு சுதாரித்துக் கொண்டுவிட்ட பிறகும் அதனால் ஏற் படும் ஆபத்துகளையும் நாயகி எளி தாகக் கடந்துவிடுகிறார். இரண்டாம் பாதியில் நிறைய கிளைக் கதைகள் சேர்க்கப்பட்டிருப்பது திரைக்கதை இலக்கற்றுப் பயணிப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

வன்முறையை இவ்வளவு விரிவாக வும் கொடூரமாகவும் காட்சிப்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. படத்தில் கொடூரக் குற்றங்கள் செய்பவர் கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது நெருடலாக இருக்கிறது. பகவதி பெரு மாள் பாத்திரத்தின் மூலம் அதை சற்றே ஈடுகட்டுகிறார்கள். இறுதியில் நாயகிக்கு நேரும் முடிவும் ஏற்கத்தக்கதாக இல்லை. கதையின் நகர்வு சென்னை களமாக காட்டினாலும், முற்றிலும் மும்பை நகருக்குள் நடக்கும் ஒரு கதை என்ற ஓர் உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

மொத்த படத்தையும் தோளில் சுமக் கிறார் ராசியாவாக வரும் பிரியங்கா ரூத். கவர்ச்சி ததும்பும் காதலில் தொடங்கி, கணவனை இழந்து தவிக்கும் தருணத் துக்கு மாறி, கொலை வெறியைக் கண் களில் படர விட்டு கம்பீரமாய் திரிகிறார் பிரியங்கா ரூத். சண்டைக் காட்சிகளிலும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். வேலு பிரபாகரனின் அறிமுகக் காட்சியே வன்மத்தின் உச்சம். அலட்டாமல் அசர வைக்கிறார். டேனியல் பாலாஜி, பி.எல். தேனப்பன், ஆடுகளம் நரேன், ஈ.ராமதாஸ் என அனைவரும் தங்களது பங்களிப்பை நிறைவாக செய்திருக்கின்றனர்.

ஷ்யாமளாங்னின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலுவூட்டுகின்றன. ஒளிப் பதிவாளர் கார்த்திக் குமார் பயன்படுத்தி யிருக்கும் வண்ணங்கள் நிழலுலகத்தை கச்சிதமாகப் படம்பிடித்துள்ளன. சில காட்சிகளில் ஒளிப்பதிவு திரையோடு நம்மை ஒன்ற வைக்கிறது.

கேங்க்ஸ்ட்ர் பட விரும்பிகளுக்கு ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஒரு கொண் டாட்டம். வன்முறையைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி இரண்டாம் பாதி திரைக் கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்தப் படம் ஈர்த்திருக்கும்.