மூன்று கதைகள் ஓரிடத்தில் வந்து நிற்கிற திரைக்கதை ‘இ.பி.கோ 302’

செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ‘இ.பி.கோ 302’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் கஸ்தூரி கதாநாயகியாக நடிக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்புல்லான போலீஸ் அதிகாரி வேடமேற்கிறார். ஒரு கதாநாயகனுக்கு உருவாக்கப்படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

0a1a

இளம் காதலர்களாக நாகசக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள் மற்றும் வையாபுரி, ராபின் பிரபு, போண்டா மணி, வின்ஸ்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  –   தண்டபாணி

இசை  –   அலெக்ஸ்பால்

எடிட்டிங்   –   காளிதாஸ்

கலை –  மணிமொழியான்

நடனம்  –   தினா

ஸ்டண்ட்  –   தீப்பொறி நித்யா

பாடல்கள்  –   முத்துவிஜயன்.

தயாரிப்பு மேற்பார்வை  –   ராஜசேகர்

இணை தயாரிப்பு  –   ஆர்.பிரபு

தயாரிப்பு –     செங்கோடன் துரைசாமி

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சலங்கை துரை. இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர்.

‘இ.பி.கோ 302’ படம் பற்றி இயக்குனர் கூறுகையில்,

”கஸ்தூரி அதிகாரியாக உள்ள பகுதியில், முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாதபடி   படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது…செத்தவன் யார் என்று தெரியவில்லை. கொலை செய்தவன் யார் என்றும் தெரியவில்லை

காவல் நிலையத்துக்குள் அடைக்கலம் தேடிவந்த இளம் ஜோடிகள், வெளியே போனால் சாதி ஆணவப் படுகொலை செய்யப்படக் கூடிய ஆபத்து.

இன்னொரு படுகொலை வழக்கு.

இந்த மூன்று கதைகளும் ஓரிடத்தில் வந்து நிற்கிற திரைக்கதை. அந்த முடிச்சை அவிழ்க்கிற துர்கா ஐ.பி.எஸ் தான் கஸ்துரி. ரொம்பவும் பவர்புல்லான வேடம் அவருக்கு… நிறைவாக செய்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் உள்ளது.

இந்த படம் நடந்துகொண்டிருக்கும்போதே  புதுமுகம் நிர்மல்ராஜ் என்பவரை வைத்து “எதிர்வினை” என்கிற படத்தையும் இயக்கிக்கொண்டிருக்கிறேன். அதையும் இதே செளத் இந்தியன் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தான் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு படங்களும் நிறைவான படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது”” என்றார் இயக்குனர் சலங்கை துரை.