“கண்ணுல தண்ணி வருதான்னு செக் செஞ்சுக்கிட்டேன்”: ஓவியாவின் இன்னொரு அருள்வாக்கு!

‘நான் அழல. கண்ணு வேர்க்குது’ என்பதற்கு நிகரான சமாளிப்பு, “கண்ணுல தண்ணி வருதான்னு செக் செஞ்சுக்கிட்டேன்.”

சோகத்தை சுமையாக்கி எழவு கொட்டாமல் சுய பகடியாகவும், தத்துவமாகவும் ஆக்கும் தலைவியின் இன்னொரு அருள்வாக்கு இது.

ஜென் தத்துவங்களுக்கு இணையாக இவையும் தொகுக்கப்பட வேண்டியது வரலாற்றுக் கட்டாயம்.

# # #

இப்போதெல்லாம் எந்தவொரு அட்டகாசமான துள்ளலிசைப் பாடலைக் கேட்டாலும், தலைவி இதற்கு எப்படி ரகளையாக நடனமாடுவார் என்கிற கற்பனைக் காட்சியே தோன்றுகிறது.

என்னை வென்று விட்டாயடி தங்கமே!

SURESH KANNAN