அதிமுக பொதுக்குழுவில் ‘ஒற்றை தலைமை’க்கான தீர்மானம் நிறைவேற்ற தடை – உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னையில் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்திக்கொள்ளலாம்; அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் கொடுத்த 23 தீர்மானங்களை விவாதித்து நிறைவேற்றிக்கொள்ளலாம்; இவை தவிர, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை ‘ஒற்றைத் தலைமை’யாக தேர்வு செய்யும் தனித் தீர்மானம் உள்ளிட்ட வேறு எந்த தனித் தீர்மானத்தையும் விவாதிக்கலாம்; ஆனால் நிறைவேற்றக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று அதிகாலை 4 மணியளவில் உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள்.

Read previous post:
0a1c
பழங்குடி சமூகங்களுக்கு நடக்கும் துரோகங்களுக்கு முர்மு தேர்வு ஒரு ஷாக் அப்சர்வராக இருக்கும்!

எல்லா தரப்பையும் உள்ளடக்கிய, எல்லா தரப்புக்கும் வாய்ப்பளிக்கிற கட்சியாக தன்னைக் காட்டிக்கொள்ளக்கூடிய நிர்பந்தம் அல்லது திட்டம் பாஜக.வுக்கு இருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், அதன் நகர்வுகளில் கட்சியின்

Close