திரைப்பட தயாரிப்பாளரின் மகனை மணக்கும் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் பேத்தி!
திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் பேத்தியும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் இடையிலான நிச்சயதார்த்த விழா வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் கல்லூரி கலைஞர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
விழாவில் திமுக எம்.பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், திமுக பிரமுகர்கள் நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஜெகத்ரட்சகன், மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த ஆர்.கே.செல்வமணி, தீனா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜெய், சாந்தனு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நவம்பர் முதல் வாரத்தில் சென்னை ஆர்கே கன்வென்ஷன் செண்டரில் திருமணம் நடைபெற உள்ளது.
