எதிர்ப்பு எதிரொலி: ஜோதிடர் ரிக்கி ராதனுக்கு அரசுப்பதவி என்ற ஆணையை திரும்ப பெற்றது தவெக அரசு!

தவெக செய்​தித் தொடர்​பாள​ரான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்​டிட் வெற்​றிவேல் என்​பவரை முதல்​வர் விஜய்​யின் அரசி​யல் பிரிவு சிறப்பு அதி​காரி​யாக நியமனம் செய்து பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்​பிய​தால் அந்த உத்​தரவு திரும்​பப் பெறப்​பட்​டுள்​ளது.

முதல்​வர் விஜய்க்கு நீண்ட கால​மாக ஆஸ்​தான ஜோதிட​ராக ரிக்கி ராதன் பண்​டிட் வெற்​றிவேல் இருந்து வரு​கிறார். இவர் கொடுக்​கும் ஆலோ​சனை​களின் அடிப்​படை​யில்​தான் விஜய் முக்​கிய முடிவு​களை எடுத்து வரு​கிறார் என்​கிறார்​கள்.

ரிக்கி ராதனுக்கு தவெக​வின் செய்​தித் தொடர்​பாளர் பதவி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது. இப்​படி​யான சூழலில்​தான் தமிழக முதல்​வரின் அரசி​யல் விவ​காரங்​களைக் கவனிப்​ப​தற்​கான சிறப்பு அதி​காரி​யாக ரிக்கி ராதன் நியமிக்​கப்​பட்​டார்.

இதற்கு பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். இதுகுறித்து மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் சண்​முகம் கூறும்​போது, “அறி​வியல் கண்​ணோட்​டத்தை வளர்க்க வேண்​டியது அரசின் கடமை.

முதல்​வரின் அரசி​யல் பிரிவு செய​லா​ள​ராக இன்று அறிவிக்​கப்​பட்​டுள்ள ரிக்கி ராதன் என்​பவர் அடிப்​படை​யில் ஒரு ஜோதிடர். அரசுச் செல​வில் அதி​காரி​யாக இத்​தகைய ஒரு​வரை நியமித்​திருப்​பது, மக்​கள் மத்​தி​யில் ஜோதிடம் தொடர்​பான நம்​பிக்​கையை அதி​கப்​படுத்​தவே உதவும்.

இவர் அரசி​யல் ஆலோ​சனை​களை கூறு​வார் என்​பதும் ஏற்​புடையதல்ல” என்று கூறினார். காங்​கிரஸ் எம்​.பி. சசி​காந்த் செந்​தில், “ஒரு ஜோதிடருக்கு ஏன் அரசு சிறப்பு அதி​காரி (OSD) பதவி வழங்​கப்பட வேண்​டும் என்​பது எனக்கு புரிய​வில்​லை. யாராவது விளக்க முடி​யு​மா?” எனக் கேள்வி எழுப்​பி​னார்.

விசிக சட்​டப்​பேர​வைக் குழுத் தலை​வர் வன்​னியரசு, “அறி​வியலுக்​குப் புறம்​பான நியமனத்தை திரும்​பப் பெறுக. ஆஸ்​தான ஜோதிடர்​கள் என்​பவர்​கள் மன்​னர்​களின் அரசவை​யில் ஆலோ​சனை கூறும் ராஜகுருக்​களாக வலம்​வந்​தவர்​கள். ஆனால் இன்று மன்​னர்​களும் இல்​லை, மன்​ன​ராட்​சி​யும் இல்​லை” எனத் தெரி​வித்​திருந்​தார்.

இப்​படி​யான சூழலில்​தான் நேற்று சட்​டப்​பேர​வைக் கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது பண்​டிட் நியமனத்​துக்கு தேமு​திக, விசிக, கொமதேக, மஜக உள்​ளிட்ட கட்​சிகள் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இதையடுத்து நடந்த நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் வெற்​றி​பெற்ற கையோடு “மக்​களின் கோரிக்​கைக்கு செவி​சாய்க்​கும் முக​மாக முதல் வேலை​யாக அரசி​யல் பிரிவு சிறப்பு அதி​காரி​யாக ரிக்கி ராதன் பண்​டிட் வெற்​றிவேல் நியமனம் செய்​யப்​பட்ட உத்​தரவு 24 மணி நேரத்​துக்​குள் ரத்து செய்​யப்​படும்” என முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டார்.

அதன்​படி ரிக்கி ராதனை முதல்​வரின் அரசி​யல் பிரிவு சிறப்பு அதி​காரி​யாக நியமித்து பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணையை தவெக அரசு திரும்​பப் பெற்​றுள்​ளது.