‘TN 2026 – தங்க நட்சத்திரம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில், கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா பேசியதாவது..,
நான் நடுவில் சில காலமாக ஒளிப்பதிவு செய்யவில்லை தம்பி ராமையா சார் தான் முதலில் இந்த படத்துக்கு என்னை கூட்டி வந்தார். அதற்குப் பிறகு தான் நான் தொடர்ந்து படங்களுக்கு கமிட்டாக ஆரம்பித்தேன். இந்த படத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் ஒரு பிரம்மாண்டமான விஷுவல்ஸ் கொடுத்திருக்கோம். அதே நேரத்தில், ஒரு ஸ்மார்ட்டான டைரக்டருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தில் நடித்த ஹீரோ நட்டி, அவர் ஏற்கனவே ஒரு பெரிய சினிமாடோகிராஃபர். அவருடைய படங்களை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்திருக்கேன். அதனால் அவருடன் வேலை செய்வது ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவர் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து உதவினார். அனைவருக்கும் நன்றி.

படத்தொகுப்பாளர் அரள் R தங்கம் பேசியதாவது..,
இது தான் எனது முதல் மேடை அனுபவம். அதனால் சிறிது பதட்டமாக உள்ளது. முதலில் இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் உமாபதி அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். அதேபோல் தம்பிராமையா சார், நட்டி சார், எம் எஸ் பாஸ்கர் சார் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள். பார்த்த பிறகு உங்கள் கருத்துகளை கண்டிப்பாக பகிருங்கள். நன்றி.

நடிகை ஷிரித்தா பேசியதாவது..,
இன்று இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய கண்ணன் சார் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
அதேபோல், தம்பி ராமையா சார் அவர்கள் முதலில் என்னை தொடர்பு கொண்டு, “நம்பிக்கையுடன் வாருங்கள்” என்று கூறி இந்த வாய்ப்பை அளித்ததற்கும் எனது நன்றி. இந்தப் படத்தின் மூலம் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இந்த படம் ஒரு பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு புதியவராக, பெரிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. குறிப்பாக, உமாபதி அவர்களுடன் வேலை செய்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் உற்சாகமான, மகிழ்ச்சியான நபர். அதனால் ஒரு நாள்கூட வேலை செய்த போது அழுத்தமாக உணரவில்லை. ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவே சென்றது.

இன்றைக்கு நான் ஒரு பெரிய ரசிகையாக யாருக்கு மாறியிருக்கேன் என்றால்—நிச்சயமாக அது நட்டி சார் தான்.
நீங்கள் டீசரை பார்த்த பிறகு இதை உணர்ந்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி உடல் மொழி, தனித்தனி வெளிப்பாடு. ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு அவர் மாறும் விதம், ஒரு பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீர் அந்த பாத்திரத்தின் வடிவத்தை எடுப்பதுபோல் இருந்தது. அவ்வளவு சிறப்பாக அவர் அனைத்து கதாபாத்திரங்களிலும் பொருந்தியுள்ளார். நட்டி சார். இன்று முதல் நான் உங்கள் பெரிய ரசிகை. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

நடிகர் இளவரசு பேசியதாவது..,
ஒரு திரைப்படத்தில் நடித்து, அந்த படம் முறையாக வெளியேறி வெற்றி பெறுவது அதை விட பெரிய சந்தோஷம், எங்கள் போன்ற திரைப்படத் துறையினருக்கு வேறு எதுவும் இல்லை. ஒரு படத்தை உருவாக்குவது முக்கியமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மிக முக்கியம். ரவி சார், இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக திட்டமிட்டு, படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் எடுத்த முயற்சி, அது உங்கள் சினிமா மீது உள்ள அன்பை தெளிவாக காட்டுகிறது. ஒரு சினிமாக்காரராக, சினிமா எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று மனமார வேண்டுகிறேன்.

இந்த படத்தின் இயக்குநர் உமாபதி என் நண்பரின் மகன் என்பதற்காகவோ, எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பதற்காகவோ நான் பாராட்டவில்லை. ஒரு திரைப்படத்தை எப்படி கையாள வேண்டும், அதன் மேலாண்மை, அதன் வடிவமைப்பு எல்லாவற்றையும் தெளிவாக புரிந்துகொண்டு, மிகப் பொறுப்புடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் படம் பார்க்கும் போது நான் சொல்வதின் அர்த்தம் உங்களுக்கு புரியும்.

புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பது மிகவும் அவசியம். இந்த படத்தில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன், ஒரு நடனம் ஆடியிருக்கிறேன், ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறேன். இதற்காக பாடல், நடனம், சண்டை ஆகிய துறைகளில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றி.

நானும், எம். எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் மூவரும் இந்த வயதில் பல அனுபவங்களை கடந்து வந்தவர்கள். அதனால் போட்டி, பொறாமை போன்றவற்றை தாண்டி, ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவோடு இந்த படத்தில் நடித்துள்ளோம். இயக்குநர் உமாபதி இந்த படத்தில் கதை, வசனம், அனைத்திலும் அக்கறையுடன் உழைத்துள்ளார். படம் மிகவும் சுவாரஸ்யமாக உருவாகியுள்ளது. டிரெய்லர் பார்த்த பிறகு பல கேள்விகள் எழுந்திருக்கும். அந்த கேள்விகள் இன்னும் அதிகரித்தால், அது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஓடி, வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படம் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டியுள்ளது. ஆனால் அதை நீங்கள் திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன் இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நன்றி.

ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ பேசியதாவது..,
“TN 2026” படத்தின் இயக்குநர் உமாவும் நானும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள். அவரது வீட்டிலேயே எப்போதும் சேர்ந்து இருந்தோம். இந்தப் படத்திற்காக அவர் கதை கூறியபோது, அது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பொதுவாக நாயகர்களே சண்டைக் காட்சிகளில் நடிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் நான் நட்டி சார், பாஸ்கர் சார், இளவரசு சார் ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாகவும், நகைச்சுவையால் நிரம்பியதாகவும் இருந்தது. இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எங்கள் கதாநாயகன் நட்டி சார் இந்தப் படத்தில் புதிய தோற்றத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளிலும் அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இளவரசு சார், பாஸ்கர் சார் ஆகியோருக்கும் என் நன்றி. கடுமையான வெயிலிலும் அனைவரும் உழைத்து இந்தக் காட்சியை உருவாக்கினோம். அதன் பலன் திரையில் நிச்சயமாக தெரியும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்கு மீண்டும் நன்றி.
நடன இயக்குநர் பிரவீன் பேசியதாவது..,
இந்த மேடையில் பேசுவது எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. உமாவை நீங்கள் ஒரு இயக்குநராக பார்க்கிறீர்கள். ஆனால் நான் அவரை முதலில் ஒரு சிறந்த நடனக் கலைஞராகத்தான் அறிந்தேன். என் வாழ்க்கையில் நான் சந்தித்த பலரும் சிறந்த நடனக் கலைஞர்கள். ஆனால் இன்று பல வருடங்களுக்கு பிறகு, அவர்களை ஒரு இயக்குநராகவும், ஸ்டண்ட் இயக்குநராகவும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

உமா, இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி. நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். பெரிய நடிகர்கள் முன் பேசுவது எனக்கு இன்னும் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. இந்தப்படத்தில் ஒரு பாடல் ஒரு பழைய கால பாணியில் இருக்க வேண்டும் என்று உமா கூறினார். அதற்காக அவர் தானே அந்த நடனத்தை செய்து காட்டி விளக்கினார். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
ஒளிப்பதிவாளர் சார், என்னை பொறுமையாக வழிநடத்தியதற்கு நன்றி. படத்தொகுப்பாளர் சார், உங்கள் சிறந்த பணிக்கு நன்றி. இந்த படத்தின் வெற்றியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட ஆவலாக இருக்கிறேன். நன்றி.

நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது..,
இந்த படம் ஒரு சிறந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. நான் இதுவரை நடித்த எந்த படத்திலும் இவ்வளவு மகிழ்ச்சியாக நடித்ததில்லை. இந்த படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு ராமையா சார் அவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பில் நீங்கள் சொன்ன ஒரு வரி எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. இயக்குனர் உமாபதி அவர்கள் மிக திறமையானவர். அவரின் இயக்கமும் கதையை காட்சிப்படுத்தும் விதமும் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படத்தில் முழு குழுவின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த படத்தின் உணர்வு அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இதில் நல்ல செய்திகளும், பொழுதுபோக்கும் சேர்ந்து இருக்கின்றன. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த படம் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
நட்டி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நான் “க்ளூக்கோஸ் மாமி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதும், சுவாரஸ்யமானதும் ஆகும். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். எல்லோரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் ஆதித்யா கதிர் பேசியதாவது..,
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். இந்த மேடையில் பேசுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஸ்டண்ட் மாஸ்டர் சொன்ன மாதிரி, இந்த படத்தில் எல்லாரும் சண்டை போட்டிருக்காங்க. இளவரசு சார், எம்.எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் எல்லாரும் தங்களுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொருவரும் உழைத்ததுதான் இந்த படத்தின் வெற்றி. இதைப் பார்க்கும்போது ஒரு பெரிய குழுவின் முயற்சி என்று சொல்லலாம்.அதே மாதிரி ஒரு அரசியல் கூட்டத்தில் இருப்பதுபோல ஒரு உற்சாகம் இங்கே தெரிகிறது. அங்கே எல்லோரும் “நாம்தான் ஜெயிப்போம்” என்ற நம்பிக்கையோடு இருப்பார்கள். அதே நம்பிக்கை இந்த படக்குழுவிலும் தெளிவாக தெரிகிறது. அந்த நம்பிக்கையே இந்த படத்தின் பெரிய பலம். உமாபதி அண்ணா இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. அதை விட தம்பி ராமையா சார் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். நான் செய்த ஒவ்வொரு விஷயத்தையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன். அவர் எப்போதும் “நீ பெரிய நிலைக்கு வருவாய்” என்று உற்சாகம் கொடுத்தார். இந்த சிறிய கதாபாத்திரத்திற்குக் கூட என்னை பரிந்துரைத்தது அவர்தான் என்று நினைக்கிறேன். அவரின் நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஒரு நல்ல ஆதரவு கிடைத்தால் நாம் இன்னும் முன்னேற முடியும். இந்த படம் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றி தரும் என்று நம்புகிறேன். நீங்கள் ஒரு பெரிய இயக்குநராக வருவீர்கள். எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது..,
இந்த மேடையில் நிற்கும் வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இங்கு இருக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்துவமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அதை பார்த்து நான் மிகவும் வியந்தேன். மேடையில் அமர்ந்திருக்கும் இந்த கலைஞர்கள் அனைவரிடமிருந்தும் நான் பல விசயங்கள் கற்றுக்கொண்டேன். அவர்களை பார்த்ததால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன். இரண்டாவது காரணம் உமா – அவருடைய சிரிப்பு எல்லோரையும் கவரும். சில நேரங்களில் சிரிப்பு கூட வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் சக்தியாக இருக்கும். அந்த மாதிரியான ஒரு மகிழ்ச்சி இந்த படத்திலும் இருக்கிறது.

எங்கள் நண்பர்கள் எழுதிய பாடலும் அதே உணர்வை தருகிறது. பிரபு சிவா சார் மற்றும் சேதன் சங்கர் அவர்களுக்கு என் நன்றி. தமிழ்நாட்டின் சிறந்த கலைஞர்களுடன் அமர்ந்திருப்பது பெருமை அளிக்கிறது. இந்த வாய்ப்பை நான் ஒரு பெரிய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். இந்த பாடலை அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். இதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களையும் நிச்சயம் கவரும். அனைவரும் சந்தோஷமாக வெளியேறுவீர்கள் என்று நம்புகிறேன். எல்லா கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். நன்றி.

நடிகை இந்திரஜா ரோபோ சங்கர் பேசியதாவது..,
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். இந்த மேடை எனக்கு ஒரு நன்றி சொல்லும் முக்கியமான தருணம். முதலில் தம்பி ராமையா பெரியப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் எங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தவர். அப்பாவுக்கு அடுத்ததாக எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான்.
“இது உன் வீடு, நீ எப்போதும் திரும்பி வரலாம்” என்ற அவரது வார்த்தை எனக்கு தைரியம் தந்தது. அந்த நம்பிக்கையால்தான் இன்று நான் இங்கே நிமிர்ந்து நிற்கிறேன். அடுத்து கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் நன்றி. எங்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில் அவர் செய்த உதவி மறக்க முடியாதது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆதரவு அளித்தார். அதற்காக எங்கள் குடும்பம் எப்போதும் நன்றியுடன் இருக்கும்.

என் உமா அண்ணாவுக்கு என் சிறப்பு நன்றி. எனக்கு உடன்பிறந்தவர்கள் இல்லையென்றாலும், அவர் எப்போதும் அண்ணனாக இருந்தார். எந்த நிலையிலும் என்னை கைவிடாமல், கையை பிடித்து இங்கே வரைக்கும் கொண்டு வந்தார். இன்று அவரை இயக்குநராக பார்க்கும் போது எனக்கு மிகுந்த பெருமை மற்றும் சந்தோஷம். இந்த மேடையில் இருக்கும் அனைத்து பெரிய கலைஞர்களுடனும் நிற்பது எனக்கு ஒரு பெருமை. அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். எல்லாரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

நடிகர் சாம்ஸ் பேசியதாவது..,
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். இந்த விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. முதல்முறையாக இப்படியான வித்தியாசமான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இந்த புதிய கான்செப்ட்டில் நிகழ்ச்சியை அமைத்த குழுவுக்கு என் பாராட்டுகள். ஒரு நடிகராக நான் அரசியல் கலப்பில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் இந்த படத்தின் “கட்சி” எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் சிரிப்போடு இதில் சேர்ந்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக செய்யப்பட்ட ஒரு விஷயம். இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் மிகுந்த உழைப்பாளி. ஒரு நல்ல தயாரிப்பாளராக இருக்க பல திறன்கள் தேவைப்படுகிறது. அந்த அனைத்தும் அவரிடம் இருக்கிறது என்று நம்புகிறேன். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றி தரும். தம்பி ராமையா சார் எப்போதும் அனைவரையும் சேர்த்து வளர்க்கும் நல்ல உள்ளம் கொண்டவர்.
அவருடன் வேலை செய்வது எனக்கு எப்போதும் ஒரு நல்ல அனுபவம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது.

உமாபதி ஒரு மல்டி-டேலண்ட் கலைஞர். நடிப்பு, நடனம், மார்ஷியல் ஆர்ட்ஸ், இயக்கம் என பல திறமைகள் உள்ளவர். இந்த படத்தில் அவருடைய இயக்கத்தில் நான் நடித்தது மகிழ்ச்சி. அவருக்கு இந்த படம் பெரிய வெற்றி தரும் என்று நம்புகிறேன். நட்டி சார் இந்த படத்தில் அசத்தலான நடிப்பை காட்டியுள்ளார். அவருடைய வேறுபட்ட நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படம் அவருக்கு ஒரு புதிய அடையாளமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சார் மற்றும் மற்ற கலைஞர்களுடன் இணைந்து நடித்தது சந்தோஷம். எனக்கு கொடுத்த இந்த சிறிய கதாபாத்திரமும் மிகவும் பிடித்தது. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். நல்ல படம் வந்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதேபோல் இந்த படமும் மக்களை மகிழ்விக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

பாடலாசிரியர் மோகன்ராஜ் பேசியதாவது..,
சினிமா நிகழ்ச்சியை ஒரு மாநாடு மாதிரி நடத்தும் இந்த ஐடியா மிகவும் புதுமையானது. இந்த மாதிரி முயற்சியை எடுத்த இந்த படக்குழுவை நான் பாராட்டுகிறேன். நான் ஒரு அரசியல் சார்ந்த படத்தில் பாடல் எழுத வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சி. அரசியல் என்பது நம்ம வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்று. நாம் தனியாக இருந்தாலும் கூட நம்ம மனசுக்குள்ளே ஒரு அரசியல் நடக்கிறது. அதுவே வாழ்க்கையின் ஒரு உண்மை என்று நான் நம்புகிறேன்.

இயக்குனருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நான் பாடல் எழுத வேண்டும் என்று அவரே விரும்பி அழைத்தார். தம்பி ராமையா சார் என்னை தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பை கொடுத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். அவர் என்மேல் வைத்த நம்பிக்கை எனக்கு உற்சாகம் தந்தது. இந்த பாடலின் சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. ஆத்திகம், நாத்திகம் கலந்து வரும் ஒரு புதுமையான கருத்தை கொண்டு அமைந்தது. முதலில் அது எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இந்த குழு எனக்கு கொடுத்தது.நான் இந்த பாடலை முழுமையாக கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். நட்டி சார் – நான் உங்கள் பெரிய ரசிகன். உங்களுடைய நடிப்பு இந்த படத்திலும் பெரிய வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன். தம்பி ராமையா சார் – உங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. நீங்கள் கொடுத்த அன்பும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் முக்கியமானது. இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் ஒரு பெரிய வெற்றி இயக்குனராக உயர்வார். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றி. எல்லாரும் இந்த படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது..,
இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எங்கே சென்றாலும் இந்த படத்தை பற்றிய கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. அதற்கு முக்கிய காரணம் இந்த டீசரின் தாக்கமே. இந்த படத்தை ஒரு சிவகாசி பட்டாசு பேக்கேஜ் மாதிரி சொல்லலாம். அதுக்குள் பல வகையான “வெடிகள்” இருக்கும் போல. இந்த படத்திலும் பல வித்தியாசமான அம்சங்கள் இருக்கின்றன. எந்த இடத்தில் என்ன ஆச்சரியம் வரும் என்று தெரியாத அளவுக்கு அமைந்துள்ளது. நான் நடித்த பகுதி கொஞ்சம் மென்மையான ஒரு பகுதி. அதனால் முழு படத்தின் பரப்பை நான் முழுவதும் அனுபவிக்க முடியவில்லை. ஆனால் நான் பார்த்த அளவுக்கு இந்த படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

இந்த இடத்தில் தம்பி ராமையா அவர்களை பற்றி சொல்ல வேண்டும். அவர் எப்போதும் வெற்றி படங்களை கொடுக்கக்கூடிய திறமைசாலி. இந்த படமும் அந்த வரிசையில் சேரும் என்று நம்புகிறேன். முழு கதையை எனக்கு சொல்லவில்லை என்றாலும், சில காட்சிகள் மற்றும் குறிப்பாக நட்டி சார் கதாபாத்திரம் பற்றி கேட்டபோது, அது மிகவும் வலுவானதாக இருக்கும் என்று புரிந்தது. அவருடைய நடிப்பு இந்த படத்தில் ஒரு பெரிய பலமாக இருக்கும்.

இந்த மேடை அமைப்பே படத்தின் தன்மையை காட்டுகிறது. அதேபோல் இந்த படம் ஒரு தனித்துவமான முயற்சி. இயக்குனர் உமாபதி ராமையா குறுகிய காலத்தில் இந்த படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். அவருக்கு இந்த படம் ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும். நீங்கள் எப்படி முந்தைய படங்களை வெற்றி படங்களாக்கினீர்களோ, அதேபோல் இந்த படத்தையும் வெற்றி பெறச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

நடிகர் M S பாஸ்கர் பேசியதாவது..,
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். இந்த இனிய விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தின் புரமோஷன் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. அரசியல் பின்னணியுடன் இருந்தாலும் இது முழுக்க பொழுதுபோக்கு நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு நல்ல முயற்சி இது. இயக்குனர் இந்த படத்தை அழகாக வடிவமைத்திருக்கிறார். ஒரு அருமையான கதையும், வித்தியாசமான அணுகுமுறையும் இதில் உள்ளது.

இந்த படத்தில் நான் நடித்தது எனக்கு ஒரு புதிய அனுபவம். முன்னதாக சில படங்களில் இணைந்து நடித்த கலைஞர்களுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக இளவரசு , தம்பி ராமையா போன்ற திறமையான நடிகர்களுடன் மீண்டும் இணைந்து நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக மனமார்ந்த நன்றி. இதேபோல் தம்பி ராமையா மற்றும் இயக்குனர் உமாபதி அவர்களுக்கும் நன்றி. அவர்களின் ஒத்துழைப்பால் இந்த அனுபவம் இன்னும் சிறப்பானதாக இருந்தது. உமாபதி நடிப்பதில் எனக்கு முழு சுதந்திரம் தந்து என்னை மிக நன்றாக பார்த்துக்கொண்டார். இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். அதற்காக உங்கள் அனைவரின் ஆதரவு மிகவும் அவசியம். எல்லாரும் இந்த படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

இயக்குநர் உமாபதி ராமையா பேசியதாவது..,
முதலில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த திரைப்படம் இவ்வளவு நன்றாக உருவாக அவரின் ஆதரவு மிக முக்கியம். அவர் எங்களுக்கு முழு சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார். அதேபோல் தீபக் ரவி சார் அவர்களும் எப்போதும் உற்சாகம் அளித்து ஆதரித்தார். இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றி. இசையமைப்பாளர் தர்புகா சிவா, எடிட்டர், ஃபைட் மாஸ்டர், கோரியோகிராஃபர்கள் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் அனைவரின் பங்களிப்பும் சிறப்பானது. அவர்களின் ஒத்துழைப்பால்தான் இந்த படம் சிறப்பாக உருவாகியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் டீம் மற்றும் சிஜி டீமிற்கும் என் நன்றி. நாள்-இரவு உழைத்து இந்த படத்தை முழுமையாக்கி வருகிறார்கள்.

இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எம்.எஸ். பாஸ்கர் சார், இளவரசு சார் போன்ற பெரிய கலைஞர்கள் ஒரு புதிய முயற்சிக்காக எங்களை ஆதரித்தது மிகப் பெரிய விஷயம். அவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் முழு உற்சாகத்துடன் நடித்தார்கள்.

நட்டி சார் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான நடிப்பை காட்டியுள்ளார். பல கெட்டப்புகளில் அவர் கடுமையாக உழைத்துள்ளார். அவரது நடிப்பு இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கும். இந்த படத்தில் யாரையும் குறிவைத்து எதுவும் செய்யப்படவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு அரசியல் படம் மட்டுமே. சினிமாவாக பார்த்தால் நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். எல்லோரும் வந்து சிரித்து மகிழும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. அதனால் அரசியல் கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றி.

தம்பி ராமையா பேசியதாவது..,
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மேடையில் பேசுவதற்கு காரணம் என் குடும்பமும், எனக்கு கிடைத்த ஆதரவும்தான். இந்த படத்தின் உருவாக்கத்துக்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களின் நம்பிக்கை. சினிமாவை வெறும் தொழிலாக அல்ல, ஒரு ஆர்வமாக எடுத்துக்கொண்டவர். அவரின் அனுபவமும், பரந்த சிந்தனையும் இந்த படத்திற்கு பெரிய பலம்.

இந்த கதையை அரசியல் பின்னணியில் உருவாக்கியுள்ளோம். அது ஒரு குடும்ப அனுபவத்திலிருந்து வந்த புரிதலால் உருவானது. அரசியல் என்பது வாழ்க்கையோடு கலந்த ஒரு உண்மை என்பதையும் காட்டுகிறது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞரும் தனித்திறமையுடன் இணைந்துள்ளனர். நட்டி சார் போன்றவர்கள் தங்கள் அர்ப்பணிப்பால் கதாபாத்திரத்தை உயர்த்தியுள்ளனர். எம்.எஸ். பாஸ்கர் சார், இளவரசு சார் போன்ற அனுபவமிக்க கலைஞர்கள் இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர். இது ஒரு குழு முயற்சியாக உருவான படம். எல்லோரும் சேர்ந்து உழைத்ததால்தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது.

ஒரு படத்தை உருவாக்குவது என்பது பொறுப்பும், உணர்ச்சியும் சேர்ந்த ஒன்று. அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும். அந்த பொறுப்புடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். அவருடைய உழைப்பு மற்றும் திறமை இந்த படத்தில் தெளிவாக தெரியும். இந்தப்படம் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். மேலோட்டமாக கிடைக்கும் தகவல்களை வைத்து உடனே முடிவுக்கு வர வேண்டாம். இந்த படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை.

தம்பி ஆதவ் அர்ஜுனா அதைப் புரிந்துகொள்ள வேண்டும். யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை. அதை நீங்கள் படம் பார்த்த பிறகு நிச்சயமாக புரிந்துகொள்வீர்கள். மீடியா நண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள். பல ஆண்டுகளாக எங்களுடைய இந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை முழுமையாக பார்த்த பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

இந்த படம் வெளியாகும் நாளில் நீங்கள் பார்த்து, உங்களுக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். ஒரு தந்தையாக எனக்கு கிடைத்த மகிழ்ச்சி – என் மகன் தனது உழைப்பால் இந்த நிலைக்கு வந்திருக்கிறான் என்பதுதான். அதை நீங்கள் உணர்ந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். இந்த படத்தை எல்லாரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

நடிகர் நட்டி நட்ராஜ் பேசியதாவது..,
எல்லாருக்கும் என் மனமார்ந்த மாலை வணக்கம். முதலில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார், தீபக் ரவி சார் அவர்களுக்கு நன்றி. அதேபோல் இந்த படத்தில் உழைத்த அனைத்து உதவி இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் நன்றி.

இயக்குனர் உமாபதி சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் கட்டுப்பாட்டுடன் வேலை வாங்கும் இயக்குனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அளவில் பெரிய இயக்குனர்களின் பட்டியலில் அவர் இடம்பிடிப்பார் என்று நான் நம்புகிறேன்.

இந்த படத்தில் நான் நடித்தது ஒரு பெருமை. ஏனெனில் இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர்களுடன் நான் நடித்திருக்கிறேன்.
தம்பி ராமையா அண்ணா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் சார் – இருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதோடு இளவரசு சார், சித்ரா மேடம், விஜி மேடம் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் அருமையாக நடித்துள்ளனர்.

இயக்குனர் உமாபதி சார் ரிகர்சல் முதல் ஷூட்டிங் வரை ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக கவனிப்பார். அவர் வேலை செய்யும் விதம் மிகவும் வித்தியாசமானது. அவருடன் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தின் கதை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியலை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் முயற்சி இது.

எம்.எஸ். பாஸ்கர் சார் போன்ற பெரிய கலைஞர்கள் இந்த படத்தில் இருக்கிறதே ஒரு பெரிய பலம். அவர்களுடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு ஆசீர்வாதம். இந்த படம் யாரையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு படம். முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். அதனால் தயவு செய்து வேறு கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லாருக்கும் நன்றி. வணக்கம்.

அரசியல் கலந்த சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. தமிழ் திரையுலகில் தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இப்படத்தை தயாரித்துள்ளனர்.

நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்பக் குழு:

திரைக்கதை & இயக்கம் – உமாபதி ராமையா
கதை – தம்பி ராமையா
இசை – தர்புகா சிவா
ஒளிப்பதிவு – P.G.முத்தையா
எடிட்டிங் – அரள் R. தங்கம்
கலை – NK ராகுல்
ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ
நடனம் – சாண்டி, பிரவீன்
தயாரிப்பு மேற்பார்வை – ஶ்ரீநாத் விஸ்வநாதன்
தயாரிப்பு – கண்ணன் ரவி, தீபக் ரவி
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்