1980களின் நடிகர் – நடிகைகள் 8-வது முறையாக சந்திப்பு!

1980களில் தமிழ் திரையுலகில் கதாநாயகர்களாகவும், கதாநாயகர்களாகவும் நடித்த நடிகர்-நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து, பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இந்த வழக்கப்படி 8-வது முறையாக, இந்த ஆண்டு அவர்கள் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சி சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்றது..

இதில் சரத்குமார், பாக்யராஜ், சிரஞ்சீவி, வெங்கடேஷ், சுரேஷ், ரகுமான், அர்ஜுன், சுமன், ஜாக்கி ஷெராப், நரேஷ், ராஜ்குமார், பானுசந்தர், நடிகைகள் குஷ்பு, ராதிகா சரத்குமார், அம்பிகா, மோனிகா, ரேவதி, ஷோபனா, ஜெயசுதா, நதியா, ரம்யாகிருஷ்ணன், ராதா, சுகாசினி, பூர்ணிமா, சுமலதா, லிசி, பூனம் தில்லான், பார்வதி உள்ளிட்ட 28 நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டு, பழைய நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்கள்.

விருந்தும், நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன..