ஜி.வி.பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு நிகழ்வு – புகைப்படங்கள்

ஜி.வி.பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்து, சமீபத்தில் வெளியான படம் ‘செல்ஃபி’. இப்படத்தில் இருவரும் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த வெற்றிக் கூட்டணி இப்போது மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறது. இந்த படத்துக்கு ’13’ என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்
இப்புதிய படம் பற்றிய அறிவிப்புக்கான நிகழ்வு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு, பத்திரிகையாளர்களுடன் உரையாடினார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-